முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

MUHAMMAD'S USE OF TORTURE

By Samuel Green


இஸ்லாமை வளர்க்கவேண்டும் என்று உழைக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் "முகமது எவ்வளவு நல்லவராக வாழ்ந்தார்" என்று மற்றவர்களுக்கு போதிப்பார்கள். "இன்றைய மனித இனத்திற்கு முகமதுவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது" என்றுச் சொல்லுவார்கள். பல முஸ்லீம்களிடமும் முஸ்லீம்களில்லாதவர்களிடமும் முகமதுவைப் பற்றிப் பேசிப் பார்த்ததில் ஒன்று மட்டும் எனக்கு மிகவும் தெளிவாக புரிந்துவிட்டது. அது என்னவென்றால், இவர்கள் முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் விவரங்களை, புத்தகங்களை படிக்கவில்லை என்பது தான் அது. மற்றும் முகமது தன் வாழ்க்கையில் என்னென்ன செய்தார் என்று இவர்களுக்கு தெரியவில்லை. அவர் செய்த பல செயல்களில் ஒன்று தான் "மற்றவர்களை கொடுமைப்படுத்துவது ".

முதன் முதலாக முகமதுவின் வாழ்க்கை சரிதையை எழுதியவர் மதினாவில் பிறத இபின் இஷாக் (85-151 ஹிஜரி)  என்பவராவார். இந்த சரிதையில் "கைபர்" என்ற பட்டணத்தை முகமது கைப்பற்றிய பிறகு என்னென்ன செய்தார் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். இந்த நிகழ்ச்சியை இபின் கதிர்[1] ஏற்றுக்கொண்டுள்ளார் மற்றும் அதைப் பற்றி எழுதியும் உள்ளார்.

கைபர் பட்டணம் பற்றிய மிதமுள்ள விவரங்கள் (THE REST OF THE AFFAIR OF KHAYBAR )

கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான் (T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் "நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள் (Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)



THE REST OF THE AFFAIR OF KHAYBAR

Kinana b. al-Rabi`, who had the custody of the treasure of B. al-Nadir, was brought to the apostle who asked him about it. He denied that he knew where it was. A Jew came (T. was brought) to the apostle and said that he had seen Kinana going round a certain ruin every morning early. When the apostle said to Kinana, "Do you know that if we find you have it I shall kill you?" he said Yes. The apostle gave orders that the ruin was to be excavated and some of the treasure was found. When he asked him about the rest he refused to produce it, so the apostle gave orders to al-Zubayr b. al-`Awwam, "Torture him until you extract what he has," so he kindled a fire with flint and steel on his chest until he was nearly dead. Then the apostle delivered him to Muhammad b. Maslama and he struck off his head, in revenge for his brother Mahmud. (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)


முகமதுவின் இந்த செயல், அவருடைய நடத்தையைப் பற்றிய மிகவும் முக்கியமான விவரத்தை நமக்கு போதிக்கிறது. தன் இலக்கை அடைவதற்கு கொடுமைபடுத்துவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய மனிதனாக முகமது உள்ளார். இந்த நிகழ்ச்சியில், முகமதுவிற்கு அல்-நதிர் என்ற இனமக்களின் "பொக்கிஷங்கள்" தேவைப்பட்டது. அந்த பொக்கிஷ சாலையின் பாதுகாவலன் அதை முகமதுவிற்கு கொடுக்கவில்லை. அதனால், அவனை கொடுமைப்படுத்தும் படி முகமது கட்டளையிட்டார். முகமதுவின் தோழர்களுக்கு ஒரு மனிதனை எப்படி கொடுமைப்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரியும், எனவே, அவனை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர் தான் முகமது என்பவர். முகமது விரும்பினால் மற்றவர்கள் மீது பரிதாபப்பட்டு அவர்களை மன்னிக்கமுடியும், அதே நேரத்தில் தன் அரசாங்கத்தை விஸ்தரிக்கச் செய்வதற்காகவும் பணத்திற்காகவும் மற்றவர்களை கொடுமைப்படுத்தவும் அவரால் முடியும். இந்த வகையில் பார்க்கும் போது, உலக சரித்திரத்தில் வாழ்ந்த சாதாரண அரசர்கள் மற்றும் சர்வாதிகாரிகள் போல இவரும் செயல்பட்டுள்ளார்.


முகமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.

இயேசுவின் வாழ்க்கையே எல்லாரும் பின்பற்றத் தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளதென்று நான் சொல்வேன். நீங்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும், அவரை பின்பற்றவும் உங்களை நான் அன்புடன் அழைக்கிறேன். பைபிளில் இயேசுவைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள இந்த தொடுப்பை க்ளிக் செய்யவும்.

Endnotes

[1] Ibn Kathir, Al-Sira al-Nabawiyya, translated as, The Life of the Prophet Muhammad, (tr. Prof. Trevor Le Gassick), Reading, UK: Garnet Publishing Limited, 2000, vol. 3, p. 268.

Further Reading

Read about Muhammad's use of assassins and intimidation to spread Islam.

ஆசிரியருடைய இதர கட்டுரைகளை படிக்க: இங்கே சொடுக்கவும்.

Christian-Muslim Discussion Papers © 2005

மூலம்: MUHAMMAD'S USE OF TORTURE - By Samuel Green