இயேசு நமக்கு எவைகளை போதித்தார்

What Jesus Taught Us

இயேசு மிகவும் ஆழமான இறையியல் அல்லது தீர்க்கமான தத்துவங்களை போதிக்கவில்லை. மக்கள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிதான முறையில் பேசினார்.

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்:

கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.

ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (மத்தேயு 13:3-9, 18-23)

கேட்பவர்கள் விருப்பமில்லாமல் இருந்து பதில் தராமல் இருப்பதை தேவன் விமர்சித்தார். ஆகையால், இயேசு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்:

ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. (மத்தேயு 13:14-15)

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; . . . (லூக்கா 8:18)

மேலும் ஒரு உவமையில், இன்னொரு முக்கியமான சத்தியத்தை இயேசு விவரித்தார்:

அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்:

ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். (லூக்கா 13:6-9)

இன்னொரு உவமையில் இயேசு கீழ்கண்டவாறு விவரித்தார்:

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 15:1-8)

நம்முடைய சொந்த நீதியினாலும், நேர்மையினாலும், தேவன் விரும்பும் கனிகளை நம்மால் தரமுடியும் என்று நாம் நேர்மையாக சொல்லமுடியாது. பைபிளில் இன்னொரு இடத்தில், அந்த கனி என்பது, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்பவைகளாகும் என்று கூறுகிறது (கலாத்தியர் 5:23). இப்படிப்பட்ட கனிகளை கொடுக்க விருப்பமில்லை என்று யார் கூறுவான்?

இதே தலைப்பில் இன்னொரு உவமையை நாம் காணலாம்.

பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:11-24)

நாம் மேற்கண்ட உவமையில் கண்ட இளைய குமாரனைப் போல நம்முடைய தற்போதைய நிலையை நாம் உணரவேண்டும். இதில் அவன் தான் செய்த தவறுகளுக்கு ஒரு பிராயச்சித்தம் தருவதற்கு முயற்சி எடுக்கவில்லை, அவனால் அந்த பிராயச்சித்தம் செய்யவும் முடியாது. மட்டுமல்ல, அந்த தகப்பனும் அதை தன் மகனிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்த குமாரன் தன் வீட்டிற்குச் செல்ல விரும்பினான், அப்படியே சென்றான். தன் மகனுக்கு அவன் உடுத்திய உயர்ந்த ஆடைகள் என்பது, அந்த தகப்பன் தன் மகனின் தீய செயல்களை மூடுவதைக் காண்பிக்கிறது. அந்த தகப்பன் தன் மகனின் விரல்களில் போடுவித்த மோதிரம் என்பது, அவனை மறுபடியும் தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. அந்த தகப்பன் தன் மகனின் கால்களில் அணிவித்த காலணிகள் மறுபடியும் தன் மகன் ஒரு சுதந்திரமான மனிதன் (அவன் அடிமை அல்ல) என்பதை காண்பிக்கிறது, அக்காலத்தில் பொதுவாக அடிமைகள் காலணிகள் இன்றி நடப்பார்கள். இந்த கதையில் சொல்லப்பட்ட கோட்பாடுகள், இன்னொரு உவமையின் மூலமாகவும் விளக்கப்பட்டது.

அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். (லூக்கா 7:41-42)

மன்னிப்பு என்பது எந்த ஒரு மனிதன் தொடர்ந்து அதைத் தேடி, அதை கேட்கின்றானோ அவனுக்கு இறைவனால் தரப்படும் ஒரு பரிசாகும். தேவனுடைய இந்த அன்பை அனேக எடுத்துக்காட்டுகள் மூலமாக பைபிளில் அடிக்கடி காண்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,

வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15:3-7)

மேற்கண்ட விதமாக நடக்கும் இறைவனை நாம் அனேகமாக பார்த்திருக்கமாட்டோம். அதாவது, நாம் செய்யும் தவறுகளுக்கான செலவை அவர் திரும்ப செலுத்துகிறார் என்பதாகும். ஆனால், அவருக்கு தேவையானது நம்முடைய "இதயமாகும்". மேற்கண்ட உவமையில் பாருங்கள், கடன்பட்ட அந்த இரண்டு நபர்களாலும் தங்கள் கடனை திரும்பச் செலுத்த திராணியில்லை. பாவத்தை ஒரு முறை செய்துவிட்டால், அதை திரும்பப் பெறமுடியாது. பாவம் என்பது தேவனுடைய பரிசுத்தம் நம்மை அடைய முடியாமல் செய்கின்ற மிகப்பெரிய பிளவாக இருக்கிறது. பாவம் என்பது சரி செய்யப்பட முடியாத மிகப்பெரிய பிளவாக உள்ளது. ஆகையால், தேவன் நமக்காக எதனை செய்துள்ளாரோ அதன் மீதே நாம் சார்ந்து இருக்கவேண்டியதாக உள்ளது. கடைசியாக இயேசு கூறிய இன்னொரு உவமையை நாம் படிப்போம், இதைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை காண்போம்.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:10-14)

இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்கள் என்பவர்கள், மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த மரியாதைக்குரிய மத தலைவர்களாக இருந்தனர். பரிசேயன் என்பவன், தேவனுடைய ஒரு கட்டளையையும் மீறக்கூடாமல் இருப்பதற்காக, அதை மிகவும் கட்டுப்பாட்டுடனும், தீவிர பக்தியுடனும் கடைபிடிக்க முயற்சி எடுப்பவனாவான். ஆனால், தன் சுயத்தை பார்த்தால், தன்னுடைய இந்த மேற்கண்ட முயற்சியை, தன் உபவாசத்தை, தன் தானதர்மத்தை மெச்சிக்கொள்கின்றவனாக இருக்கிறான். இப்படிப்பட்ட நற்காரியங்களை செய்வதினால் தேவன் நிச்சயமாக தன்னை ஏற்றுக்கொள்வார் என்று எண்ணிக்கொண்டு இருப்பான்.

ஆனால், இயேசு கீழ்கண்ட விதமாக விவரித்தார்:

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். (லூக்கா 17:10)

நாம் நன்மை செய்வதும், சரியானவற்றை செய்வதும் நமக்கு ஒரு கிரீடத்தை கொடுத்துவிடாது. ஏனென்றால், நன்மை செய்வது நம்முடைய கடமையாகும் என்று இயேசு குறிப்பிட்டார். நன்மை செய்துவிட்டு, பெருமைப்பட்டுக்கொண்டால் அதனால் உபயோகமில்லை. தேவன் சொல்லிய கட்டளைகளே நமக்கு நியமங்கள். ஆகையால், நம்முடைய தோல்விகளுக்கான மன்னிப்பு நம்முடைய தேவனின் கிருபை மீது சார்ந்துள்ளது. கிருபை என்பது தகுதியில்லாத நமக்கு அவர் காட்டும் பரிவு ஆகும்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. (லூக்கா 16:15)

ஒருமுறை இயேசுவிடம், மிகவும் முக்கியமான கட்டளை எதுவென்று கேட்கப்பட்டபோது, அவர் இவ்விதமாக பதில் அளித்தார்:

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:37-40)

"கீழ்படிதல்" என்பதை நாம் கட்டாயத்தோடு செய்தால் அது மிகவும் பாரமாகிவிடும், ஆனால், அன்புடன் கட்டாயப்படுத்தப்படாமல் நாம் ஒருவருக்கு கீழ்படியும் போது, அது பாரமாக அல்ல, மிகவும் மென்மையாக மாறிவிடும்.

தேவனுக்கு பயந்து அவரை நேசிப்பது பற்றி இயேசு போதிக்கும் போது, மனிதர்கள் என்ன சொல்லுவார்களோ, அவர்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படவேண்டாம் என்று கற்றுக்கொடுத்தார்.

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)

ஒருவரை நாம் மதிக்கிறோம் என்பது, அவர் சொல்வதை நாம் நம்பும் போதும், நாம் அன்புடன் முழு இருதயத்தோடு அவருக்கு சேவை செய்யும் போதும் வெளிப்படும்.

நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். (யோவான் 16:27)

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:26)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது, இயேசு மீது நம்பிக்கை வைப்பது மீது ஆதாரப்பட்டுள்ளது. இவ்விரண்டிற்கும் வித்தியாசமில்லை.

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:16-17)

குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40)

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27)

நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு பின்விளைவு உண்டு. நாம் இயேசுவை பின்பற்ற எடுக்கும் முடிவிற்கும் சில சோதனைகள், விளைவுகள் உண்டு. இயேசுவை பின்பற்றுவதினால் நாம் கேலி பரியாசம் செய்யப்படுவோம் மற்றும் துன்புறுத்தப்படுவோம்.

என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 10:22)

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; ….. (யோவான் 15:20)

ஆனால், துன்பம் அனுபவிக்கும் நம்மை இயேசு தேற்றுகிறார்:

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5:11-12)

உலகத்தில் எந்த மனிதனைக் காட்டிலும், பொருளைக் காட்டிலும் அதிகபடியாக நாம் அவரில் அன்பு செலுத்தி, அவரை கனப்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:37)

நம் தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார், நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். ஆகையால், நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொண்டு, அவரது வழியில் நடக்கவேண்டும். இயேசு கூறுகிறார்:

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோவான் 13:34)

நம்மை நாம் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள, இயேசு ஒரு வழிமுறையை கொடுத்துச் சென்றுள்ளார்.

என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். (யோவான் 14:21)

நாம் அவருக்கு கீழ்படிகிறோம், ஏனென்றால் நாம் அவரை நம்புகிறோம் மற்றும் அவரில் அன்பு செலுத்துகிறோம். நாம் மன்னிப்பை பெறுவதற்கும், சொர்க்கத்தில் செல்வதற்கும் கீழ்படிதல் என்பது ஒரு சாதனம் அன்று.

தேவனுடைய இராஜ்ஜியம் என்பது வித்தியாசமான ஒரு இடமாகும், அந்த இடத்தில் ஒருவரின் மேன்மை பல வகைகளில் காணலாம்.

அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத்தேயு 20:25-27)

அதே போல, வெளி வேஷமாக மத கோட்பாடுகளை இயேசு கடிந்துக்கொண்டு, அவைகளை சரிப்படுத்தினார்:

பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:14-15, 18-23)

இதனால் தான் இயேசு மத தலைவர்களை கடிந்துக்கொண்டார்:

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

குருடனான பரிசேயனே! போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. (மத்தேயு 23:25-26)

மத கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வெளிப்புறமாக சுத்தப்படுத்துவது பற்றியும், உணவு சம்மந்தப்பட்ட சுத்தம் பற்றியதாகவே இருக்கும். இதற்கு நேர் எதிராக இயேசு போதித்தார்:

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8)

மக்களின் மத்தியில் இருக்கும் உறவு பற்றியும் இறைவனிடத்தில் நாம் கொண்டு இருக்கும் உறவு பற்றியும் இயேசு அனேக விவரங்களை கூறினார். அவரது வார்த்தைகள் நம்முடைய மனதையும் இதயங்களையும் சிந்திக்கவைக்கின்றன.

நேர்மையைப் பற்றி அவர் கீழ்கண்டவிதமாக கூறினார்.

அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (மத்தேயு 5:33-34, 37)

நாம் மற்றவர்களை நேசிப்பது பற்றி சாதாரணமாக நாம் கொண்டு இருக்கும் தரத்தை விட அதிகமான தரத்தை இயேசு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:43-48)

பரிசுத்தம் பற்றிம் ஜெபம் செய்வது பற்றி இயேசு எச்சரிக்கை செய்துள்ளார்:

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். (மத்தேயு 6:1-15)

மன்னிப்பு பெறுதல் மற்றும் ஜெபம், இவ்விரண்டிற்கு இடையே இருக்கும் ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார்

நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். (மத்தேயு 11:25,26)

நாம் எவ்விதம் தேவன் மீது சார்ந்து இருக்கிறோம் என்பது பற்றியும், அதே நேரத்தில் நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் எவ்விதம் பதில் அளிக்கிறார் என்பது பற்றியும் இயேசு கற்றுக்கொடுத்துள்ளார்:

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:7-11)

உபவாசம் (நோம்பு) பற்றி இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார்:

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத்தேயு 6:16-21)

உலக பொருட்கள் பற்றிய மதிப்பு என்ன? அதைப் பற்றி நம்முடைய நோக்கம் என்ன? மற்றும் நமது பொறுப்பு என்ன என்பதை இயேசு விளக்கியுள்ளார்:

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். (லூக்கா 12:15)

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். (லூக்கா 16:10-13)

வாழ்க்கையின் ஒரு பாகமாக சோதனையும், வேதனையும் உள்ளது. இவைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை இயேசு கூறியுள்ளார்.

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு 6:25-34)

நம்முடைய வாழ்க்கையில் அனேக வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அனேக தெரிவுகளை கொண்டதே வாழ்க்கையாகும். இவைகளில் ஒரு முக்கியமான தெரிவு மற்ற எல்லா தெரிவுகளை விட மேன்மையானது என்பதை இயேசு சொல்லியுள்ளார்.

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:13-14)

மதங்களில் மாய்மாலங்களை நாம் காண்கிறோமா? ஆம், மாய்மாலங்கள் மதங்களில் மிதமிஞ்சிய நிலையில் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் தான் இயேசு கீழ்கண்ட விதமாக கூறியுள்ளார்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (மத்தேயு 7:21-27)

உலகின் அதிமுக்கியமான பிரச்சனை என்னவென்றால், "துண்டிக்கப்பட்ட நம்முடைய உறவுமுறையாகும்", இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தேவனுடனான நம்முடைய உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. தேவனோடு நமக்குள்ள உறவு முறையை மறுபடியும் புதுப்பிப்பதே தாம் வந்ததற்கான பிரதான காரணம் என்று இயேசு தாமே கூறுகிறார். இதுமட்டுமல்ல, மனிதர்களிடையே துண்டிக்கப்பட்ட உறவுமுறைகளையும் சுகமாக்கவும் இயேசு வந்துள்ளார். குறிப்பாக, திருமண பந்த உறவுகளில் காணப்படும் நேர்மையற்ற தன்மையை குறித்து அவர் கூறியுள்ளார்.

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28)

மனித உறவுகளை முறித்துவிடும் பாவங்களின் வீரியத்தை விளக்குவதற்கு, இயேசு ஒரு வித்தியாசமான உவமையை அல்லது எடுத்துக்காட்டை கூறினார்.

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். (மத்தேயு 5:29-30)

இயேசு விவாகரத்து பற்றி மிகவும் அழுத்தமாக கீழ்கண்டவாறு கூறுகிறார்:

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:4-6)

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:31-32)

தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். (லூக்கா 16:18)

அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.

ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 19:8-9)

நாம் அனைவரும் ஒவ்வொருவரை மன்னிக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இறைவனிடமிருந்து நாம் நம்முடைய குற்றங்களுக்காக மன்னிப்பைப் பெற, நாம் மற்றவர்களை மன்னிப்பது என்பது அதிமுக்கியமான ஒன்றாக இருக்கிறது. எப்படி ஜெபிக்கவேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுக்கும் போது, கீழ்கண்டவாறு கூறுகிறார்:

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். (மத்தேயு 6:12)

மேலும் இயேசு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். (லூக்கா 17:3-4)

ஒருமுறை இயேசுவின் சீடர் இயேசுவிடம் வந்து "என் சகோதரன் எனக்கு விரோதமாக குற்றம் செய்தால் அவனை எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறையா?" என்று கேட்டபோது, இயேசு பதில் இவ்விதமாக அளித்தார்:

அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 18:22)

இயேசு தம்முடைய வார்த்தைகளை, தம் நடக்கையின் மூலமாக விளக்கினார். இருதயத்தைத் தொடும் ஒரு சிறப்பான உதாரணத்தை இயேசு கூறினார். மன்னிப்பு என்ற அருமையான மலரை நீங்கள் முகர்ந்துக்கொள்ள இயேசு பேசிய வார்த்தைகளை மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சி முழுவதையும் உங்கள் முன் வைக்கிறோம்.

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.

அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவான் 8:1-11)

தேவன் பாவத்தை வெறுக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இயேசு பாவிகள் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார், அதிலிருந்து அவர்கள் விடுதலை அடையவேண்டும் என்று இயேசு எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? இதனை நாம் மேற்கண்ட நிகழ்ச்சி மூலமாக அறிந்துக்கொண்டோம். இது ஒரு நிகரற்ற நிகழ்ச்சியாகும். உண்மையாகவே, நாம் அனைவரும் அவரிடம் வந்து மன்னிப்பு கோரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அந்த மன்னிப்பை அவர் மூலமாக பெற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் மீது நாம் வைக்கும் அன்பு, பாவங்களை விட்டு நாம் விடுபடுவது சுலபமான ஒன்றாக மாறிவிடும்.

கீழ்படிதலும், அவர் மீது வைத்திருக்கும் மாறாத நம்பிக்கையும், நம்மை ஒரு அடிமைத்தனத்திற்கு கொண்டுச் செல்லாது, அதற்கு பதிலாக உண்மை சுதந்திரத்தில் நம்மை அது வாழவைக்கும்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31-32)

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34)

இயேசு தம்மை நம்பும் மக்களிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3:3)

இயேசு தொடர்ந்து கூறும் போது, இந்த மறுபிறப்பு என்ற அனுபவம் இல்லாமல் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைவது என்பது கூடாத காரியம் என்று கூறினார். இதன் அர்த்தம் என்னவென்றால், இயற்கையான ஆரம்பம், இயற்கையான பிறப்பில் ஆரம்பிக்கிறது, அதே போல‌ ஆன்மீக ஆரம்பம் ஆன்மீக பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஆவிக்குரிய (ஆன்மீக) பிறப்பு எப்போது நடைபெறுகிறது என்று கேட்டால், எந்த நாளில் நாம் "விடுதலை ஆகிறோமோ?" அல்லது "மறுபடியும் பிறக்கிறோமோ" அப்போது நடைபெறுகிறது. தேவ‌ன் ந‌ம்முடைய‌ பாவ‌ங்க‌ளை ம‌ன்னிக்கும் போது, அத‌ன் மூல‌மாக‌ ந‌ம் பாவ‌ங்க‌ள் க‌ழுவ‌ப்ப‌டும் போது, நாம் விடுத‌லை பெறுகிறோம். இந்த‌ விடுத‌லை கிட‌த்த‌வுட‌ன், ந‌ம்முடைய‌ அடிமைத் த‌ன‌ம் முறிக்க‌ப்ப‌டும், குற்ற ம‌ன‌சாட்சி ந‌ம்மை விட்டு நீங்கிவிடும், அப்போது "புதிய‌ வாழ்வு" ந‌ம‌க்குள் ஆர‌ம்பிக்கும். புது வாழ்வு என்ப‌து தேவ‌னின் ஆவி ந‌ம்முடைய‌ இருத‌ங்க‌ளில் ந‌ற்கிரியைக‌ளைச் செய்யும், ம‌ட்டும‌ல்ல‌ நம்முடைய‌ இருத‌ய‌ம் புதிய‌தாக‌ மாறும் (ரோம‌ர் 12:2). இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌க்கும் போது, நாம் இய‌ற்கையாக‌வே பாவ‌த்தை வெறுப்போம், நீதியையும் நியாய‌த்தையும் நேசிப்போம், ம‌ற்றும் ந‌ம்மை விடுத‌லையாக்கிய மேசியாவாகிய இயேசுவை பின்ப‌ற்ற‌ ஆர‌ம்பிப்போம். இவைக‌ள் அனைத்தும், தேவ‌ன் ந‌ம‌க்குத் த‌ரும் பரிசாக உள்ள மன்னிப்பை நாம் பெற‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றுச் சொல்லும் ந‌ம்முடைய‌ முடிவின் மீது சார்ந்திருக்கிற‌து. இத‌ன் விளைவு - தேவ‌னை இன்னும் அதிக‌மாக‌ அறிய‌ ந‌ம‌க்கு ஆர்வ‌ம் உண்டாகும். தேவ‌ன் ந‌ம்மோடு பேச‌வும், அவர‌து வார்த்தைக‌ள் மூல‌மாக‌ பேச‌வும் நாம் தேவ‌னை அனும‌தித்தால், ப‌ர‌லோகில் இருக்கும் அந்த‌ பிதாவோடு நெருங்கிய‌ உற‌வுட‌ன் வாழ‌ நாம் த‌குதியான‌வர்க‌ளாக‌ மாறுவோம்.

ஆங்கில மூலம்: What Jesus Taught Us

"ஒரு தூது" இதர கட்டுரைகள்