முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 1: முஹம்மது செய்தது போன்று செய்கிறார்களா ஹமாஸ் தீவிரவாதிகள்?

2023ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி, காஸா (காசா) பகுதியிலிருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது குண்டுகள் வீசி தாக்கினார்கள்.  இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அனேகரை கொன்றார்கள் மற்றும் 200கும் அதிகமானவர்களை கைதிகளாக பிடித்துச் சென்றார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துக்கொண்டு வருகிறது.

போர் மிகவும் தீவிரமாக இப்பொழுதும் நடந்துக்கொண்டு இருக்கிறது. போர் நடக்கும் வீடியோக்களையும், படங்களையும் மக்களின் அழுகுரல்களையும் பார்ப்பதற்கு வலிமையான‌ இருதயம் வேண்டும்.  இரண்டு பக்கவும் விளைவுகள் அதிகமாக இருக்கிறது, மக்கள் மடிகிறார்கள், பிள்ளைகள் அனாதைகளாக்கப்படுகிறார்கள்.

இரண்டு பக்கத்திலிருந்தும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும், இஸ்ரேல் மட்டும் காஸா பகுதிகளில் அமைதி திரும்பவும் இறைவனிடம் வேண்டுகிறோம்.

1) ஹமாஸ் முஸ்லிம் தீவிரவாதிகள் செய்தவைகள்:

முதலாவது ஹமாஸ் தீவிரவாதிகள் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம், அதன் பிறகு, இஸ்லாமிய இறைநபி என்ன செய்தார் என்று பார்த்தால், உண்மை புரியும்.

  • அக்டோபர் 7ம் தேதி, அதிகாலையில் வேலியை தகர்த்து இஸ்ரெலுக்குள் நுழைந்தார்கள்.  இவர்கள் ஃபஜ்ர் என்ற அதிகாலை தொழுகையை தொழுதுவிட்டுத் தான் இந்த புனிதச் செயலை செய்திருப்பார்கள். உண்மையான முஸ்லிம்கள் அதிகாலை தொழுகை கடமையை விடமாட்டார்கள்.
  • கிராமங்களில் பல நூறு பேர் நுழைந்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களை கொலை செய்தார்கள்.
  • குழந்தைகள் பிள்ளைகளின் கண்களுக்கு முன்பாக, பெற்றோர்களை கொன்றார்கள்.
  • கைதிகளாக பெண்களையும், குழந்தைகளையும் கொண்டுச் சென்றார்கள்.
  • அனேகரை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டுச் சென்றார்கள்.
  • பெற்றோர்களுக்கு முன்பாக அவர்களின் பெண் பிள்ளைகளை கற்பழித்தார்கள், கொலையும் செய்தார்கள்.
  • இந்த கொடுமைகள் சிலவற்றை வீடியோ எடுத்து வெளி உலகிற்கு அனுப்பினார்கள்.
  • ஒரு சர்வதேச இசை நிகழ்ச்சி நடக்கும் இடைத்துக்குச் சென்று, 250க்கும் அதிகமான பேர்களை இரக்கமின்றி கொன்றார்கள்.
  • அப்படி கொல்லப்பட்ட ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி, தங்கள் வாகனங்களில் கொண்டுச் சென்றார்கள், அதனையும் வீடியோ எடுத்து அனுப்பினார்கள்.

இப்படி இன்னும் அனேக வன்முறைகளில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டார்கள்.

2) ஹமாஸின் செயலுக்கும் முஹம்மதுவிற்கும் என்ன சம்மந்தம்

அன்று முஹம்மது கைபர் என்ற ஊருக்கு செய்ததை, அவரது அடிச்சுவடிகளை பின்பற்றி ஹமாஸ் இன்று செய்கிறது.  சஹீஹ் புகாரி என்ற இஸ்லாமிய நூல்களிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இங்கு கொடுக்கிறேன், படியுங்கள். இதை படிக்கும் போது, இந்த மாதம் ஹமாஸ் செய்தது போலவே உங்களுக்குத் தெரியும்.

சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371 

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்

மேற்கண்ட சரித்திர நிகழ்வின் போது, முஹம்மது என்ன செய்தாரோ, அதையே இன்று ஹமாஸ் செய்துள்ளார்கள்:

மேற்கண்ட‌ புகாரி ஹதீஸின் சுருக்கம்:

  • அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். 
  • அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! 
  • அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 
  • நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். 
  • போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது
  • 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 
  • 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
  • அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். 
  • நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
  • நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள்.
அன்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுஇன்று ஹமாஸ் தீவிரவாதிகள்
திடீரென்று அதிகாலையில் கைபர் என்ற‌ ஊரை பிடித்தார்திடீரென்று அதிகாலையில் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்தார்கள்
காலை தொழுகை செய்து தான் இந்த புனித காரியத்தை முஹம்மது செய்தார்ஹமாஸும் தொழுகை செய்திருப்பார்கள் என்று கருதலாம், உண்மை முஸ்லிம்கள் அல்லவா, தொழுதிருப்பார்கள். எந்த ஒரு தீவிரவாத செயல்களை செய்வதற்கு முன்பு அல்லாஹ்விடம் ஆசீ பெறவேண்டுமல்லவா?
அன்று பல கொலைகளை முஹம்மது அவ்வூரிலே செய்தார், ஹதீஸ் சொல்கிறது 'கைபரை பலவந்தமாக பிடித்தார்களாம்'இன்றும் ஹமாஸ் பல கொலைகளை இரக்கமின்றி செய்கிறார்கள்
அன்று ஸபிய்யா என்ற ஒரு கைபர் பெண்ணை ஒரு நபருக்கு எடுத்துக்கொள் என்று அனுமதி அளித்தார் முஹம்மது. இப்பெண்ணை 'தனக்கு அக்காளாக‌, தங்கையாக, அண்ணியாக, தாயாக' கருதவேண்டும் என்பதற்காக அல்ல, அப்பெண்ணை அடிமையாகவும், கற்பழிப்பதற்காகவும் அல்லாஹ்வின் இறைத்தூதர் முஹம்மது கொடுத்துள்ளார், அல்லாஹூ அக்பர்இன்று பல பெண்களை ஹமாஸ் பெற்றோர்களுக்கு முன்பாக கற்பழித்ததாக செய்திகளில் பார்க்கிறோம்
முஹம்மதுவும் அந்த ஸப்பியா என்ற பெண்ணை தனக்காக  திரும்ப‌ எடுத்துக்கொண்டார்.ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்க முயலும் போது, தடை செய்த பெண்களில் கால்களை உடைத்து, அதன் பிறகு கற்பழித்ததாக, செய்திகளில் வாசிக்கிறோம், அல்லாஹூ அக்பர்.

ஒருவேளை இந்த சில வரிகளை வாசிப்பவர்களாகிய நீங்கள், ஒரு முஸ்லிமாக இருந்தால், உங்கள் நிலைப்பாடு என்னவென்று உங்களை நீங்களே ஆராய்ந்துப் பாருங்கள்.

முஹம்மது செய்த அந்த செயலை, இஸ்ரேல் செய்திருந்தால்? ஸபிய்யாவின் இடத்தில் அல்லது ஹமாஸ் கற்பழித்த பெண்களில் ஒருவர் நம் அக்காள், தங்கை, அண்ணி, தாய் போன்றவர்களில் ஒருவராக‌ இருந்தால் எப்படி நம் மனநிலை இருந்திருக்கும்? அல்லாஹூ அக்பர் என்றுச் சொல்லமுடியுமா? 

அன்று முஹம்மது செய்ததும், இன்று ஹமாஸ் செய்தவைகளில் ஏதாவது வித்தியாசம் தெரிகின்றதா?

அன்று வீடியோக்கள், புகைப்படங்கள் இல்லை என்பதினால், முஹம்மதுவினால் செய்யப்பட்ட கைபர் ஆக்கிரமிப்பில் நடந்தவைகளை நம்மால் அறியமுடியாது, ஆனால், மேற்கண்ட ஹதீஸை படித்தால், இன்று நாம் படித்த ஹமாஸ் இஸ்ரேல் செய்தி போல தெரிகிறதல்லவா?

இன்று காஸா முஸ்லிம்கள் படும் துன்பங்களுக்கு யார் காரணம்? இஸ்ரேலா? ஹமாஸா? அல்லது அல்லாஹ்வா?

அடுத்தடுத்த தொடர்களில் காண்போம்

Date: 21st Oct 2023

News and References:

  1.  "போர் ஆரம்பித்துவிட்டது!" ஒரே வரியில் சொன்ன இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு! உச்சக்கட்ட பதற்றம் | Prime Minister Benjamin Netanyahu says Israel is At War - Tamil Oneindia
  2. Israeli official confirms women were raped during Hamas attack - YouTube
  3. ‘They shot a baby’: Hamas attack survivor recounts terror in Israel kibbutz | POLITICO - YouTube
  4.  https://www.telegraph.co.uk/world-news/2023/10/07/naked-israeli-woman-paraded-jeering-hamas-fighters/
  5. Israel War: Shocking video shows children traumatised as terrorists execute their sibling - YouTube
  6. Hundreds of Innocent Israeli Women Tortured and Brutally Murdered by Hamas Terrorists - YouTube

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம்