பாகிஸ்தான் - விமானிகளுக்கு ரமளான் நோன்பு நோற்க‌ ஏன் தடை விதிக்கப்பட்டது! ரமளான் நோன்பு முஸ்லிம்கள் கடமையை சரியாகச் செய்ய தடையா?

பாகிஸ்தானின் விமானத்துறை, விமானிகள் மற்றும் விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 'பயணத்தின் போது ரமளான் நோன்பு நோற்கக்கூடாது" என்று கட்டளையிட்டுள்ளது.  ஒருவேளை விமானிகள் நோன்பை நோற்கவேண்டும் என்று விரும்பினால், அந்த நாளில் அவர்கள் விமானத்தை ஓட்டக்கூடாது, விமானத்தில் பணிபுரியக்கூடாது, அவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, வீட்டில் இருந்தபடியே நோன்பு நோற்கலாம் என்று கட்டளையிட்டுள்ளது.

இஸ்லாமிய கடமைகளில் ஒன்று  ரமளான் மாத நோன்பு:

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று, ரமளான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு நோற்பது. ஆனால், இந்த கடமையைச் செய்ய  ' பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது'! 

  • இது சரியான ஒரு சட்டமா?
  • ஏன் ஒரு இஸ்லாமிய நாடாகிய பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்தது?
  • இதன் பின்னணி என்ன?
  • ஒரு முஸ்லிம் தன் மார்க்க கடமையைச் செய்ய தடை விதிக்க, அரசாங்கத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

செய்தித்தாள்களில்: 'ரமளான் நோன்பு தடை'

கீழ்கண்ட செய்திகளை ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.

1) Pakistan International Airlines bars its captains, first officers from observing fast during Ramzan - India Today

By Press Trust of India: Pakistan's national flag carrier PIA has barred its captains and first officers from observing fast in the ongoing Islamic holy month of Ramzan.

The Pakistan International Airlines' (PIA) order has come in the backdrop of its plane crash in Karachi two years ago in which around 100 passengers, including crew members were killed. The pilot of that plane was observing fast.

2) PIA bars its captains and first officers from observing fast during Ramzan (siasat.com)

The Pakistan International Airlines’ (PIA) order has come in the backdrop of its plane crash in Karachi two years ago in which around 100 passengers, including crew members were killed. The pilot of that plane was observing fast.

இந்த தடை கடந்த ஆண்டு (2022) வெளிவந்த‌ செய்தி தான்.

விமானி நோன்பு நோற்றதால், விமானம் விபத்துக்குள்ளாகி, 90க்கும் அதிகமானபேர் பலியானார்கள்:

2020ம் ஆண்டு, ரமளான் மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது 2020, மே மாதம் 22ம் தேதி, பாகிஸ்தானின் ஒரு விமானம் விபத்திற்குள்ளானது, அதில் 97 பேர் மரித்துப்போனார்கள்.

அது விமான பழுது காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டது. விமானத்தின் தொழில் நுட்ப பழுது காரணமாக, சக்கரங்கள் வெளியே வராமல் இருந்தபடியினால், தரை இறக்கமுடியாமல், விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டளைகளை ஏற்காமல், சுயமாக மறுபடியும் முயற்சி எடுத்ததால், இந்த விபத்து நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டது.  விமானி ஏன் இப்படி நடந்துக்கொண்டார்? காரணம் அவர் ரமளான் நோன்பு நோற்று இருந்ததால், அவரால் சரியான மனநிலையில் சரியான முடிவை எடுக்கமுடியாமல், சுயமாக எடுத்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது மற்றும் 97 பேர் மரித்துப் போனார்கள்.

இதனால் தான் 2022ம் ஆண்டு, ரமளானுக்கு முன்பு, பாகிஸ்தான் அரசு, விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணத்தின் போது "ரமளான் நோன்று வைக்கவேண்டாம்" என்று கட்டளையிட்டு, இவர்களுக்கு நோன்பை தடை செய்துள்ளது.

ரமளான் நோன்பு வைப்பதினால் ஏற்படும், மனது/மூளை சம்மந்தப்பட்ட மற்றும் உடல் சம்மந்தப்பட்ட பக்க விளைவுகள்:

  • ரமளான் நோன்பு 12 லிருந்து 14 மணி வரை எதையும் உண்ணாமல் இருப்பது.
  • தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதினால் மக்கள் அதிகமாக சோர்வுற்று இருப்பார்கள்.
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல்  மற்றும் மன ரீதியாக சில பக்கவிளைவுகள் உண்டாகும்.
  • அதிக சோர்வு உண்டாகும், கண் பார்வை குறைவாக காணப்படும்
  • வேலையில் உற்சாகமின்மை, மற்றும் கூர்ந்து சிந்திக்கக்கூடிய மனநிலை குறையும்
  • விமானிகள் மற்றும் வாகனங்களை ஓட்டுபவர்கள் சரியான முடிவுகளை எடுக்க அது தடையாக இருக்கும். முக்கியமாக இது தான் மேற்கண்ட விமான விபத்து நடந்ததற்கு ஒரு முக்கியமான காரணமாகும். (Link: Pakistan International Airlines Flight 8303 - Wikipedia)

மொத்தத்தில் சில ஆபத்தான மற்றும் முக்கியமான வேலை செய்பவர்கள் தங்கள் கடமையை 100% சரியாக செய்யமுடியாமல் இருப்பதினால் தான் "பாகிஸ்தான் விமானத்துறை விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பயணத்தின் போது, நோன்பு நோற்கக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்".

ரமளான் மாதத்தில் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன:

ரமளான் மாதத்தில் மற்ற மாதங்களில் நடக்கும் விபத்துக்களை விட அதிகமாக விபத்துக்கள் நடக்கின்றன. இந்த செய்தியை சௌதி அரசாங்கம்வெளியிட்டுள்ளது, மேலும் இஃப்தார் என்றுச் சொல்லக்கூடிய, நோன்பு திறப்பு நேரமாகிய மாலை நேரத்தில் அதிகமாக இவ்விபத்துக்கள் நடக்கின்றன.

இவைகளுக்கு காரணமென்ன? மேலே சொன்ன அதே காரணங்கள் தான், ஒரு மனிதன் 12 லிருந்து 14 மணி நேரம் வரை உணவோ, தண்ணீரோ எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் போது, அவனது மூளை மனநிலை சரியாக செயல்படாது, மேலும் சீக்கிரமாக அந்த இஃப்தாரில் ஈடுபட்டு, அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளவேண்டும் என்ற அவசரத்தினால்,இவ்விபத்துக்கள் நேரிடுகின்றன.

கீழ்கண்ட செய்திகளை படித்து, விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்:

லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையின் ஆய்வு: 

1993ம் ஆண்டில், நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, செயிண்ட் மேரி மருத்துவ மனையில், ரமளான் மாதத்தில் விபத்துக்கள் மூலம் வரும் முஸ்லிம்களின் சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும், ரமளான் முடிந்த பிறகு அந்த சதவிகிதம் குறைவாக இருப்பதாகவும் கண்டரிந்துள்ளார்கள். அந்த ஆய்வை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கலாம், இதைத் தான் பாகிஸ்தான் விமான விபத்தும், சௌதி அரேபியாவின் பதிவாகும் சாலை விபத்துக்களும் சொல்லும் செய்தியாகும்.

The effect of the fast of Ramadan on accident and emergency attendances - St Mary's Hospital, Praed Street, London W2 1NY, UK

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களினால் அறிவதென்ன?  ரமளான் மாத நோன்பு முறையினால், மனிதனின் சரீர பிரகார செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன, முக்கியமாக வாகன ஓட்டுனர்கள், விமானிகள் மற்றும் மிகவும் ஆபத்தான இடங்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது.

ரமளான் நோன்பினால் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஆபத்து தங்கள் மூலம் வராமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

முஸ்லிம்கள் தங்கள் வேலைகளில் தங்கள் கடமைகளை சரியாக செய்ய இந்த ரமளான் மாத நோன்பு தடையாக உள்ளது. சிலருக்கு இதனால் உயிருக்கும் ஆபத்துள்ளது.

அல்லாஹ், இந்த ரமளான் நோன்பை கடமையில் சேர்க்காமல் இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

ஒருவர் நோன்பு (உபவாசம்) இருப்பதினால் அதிக நன்மைகள் இருக்கின்றன என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். உபவாசம் இருப்பதினால் வரும் நன்மைகளை அனைவரும் அறிவோம். ஆனால் முஸ்லிம்களின் நோன்பு நேரங்களில் அல்லது கிறிஸ்தவர்களின் உபவாச நேரங்களில், வாகனங்களை ஓட்டுதல் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

இஸ்லாமில் கூட, நோன்பு என்பது சில தவிர்க்க முடியாத காரணங்களினால் விட்டுவிடலாம், எனவே, ஆபத்தான மற்றும் முக்கியமான வேலைகளைச் செய்பவர்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

இருதய அறுவைச் சிகிச்சை அல்லது கண் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர், இஸ்லாமிய நோன்பு இருந்து, 12 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால், அவர் தன் கைகளில்  எப்படி அறுவைச் சிகிச்சை செய்யும் கத்தியை பிடித்து, தன் கடமையை சரியாகச் செய்யமுடியும்? இவரை நம்பி எப்படி நாம் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்? 

ரமளான் மாதத்தில் அறுவைச் சிகிச்சை செய்துக்கொள்பவர்கள், இந்த சிகிச்சையைச் செய்யும் மருத்துவர் ஒரு முஸ்லிமா என்று கேளுங்கள் மற்றும் அவர் நோன்பு இருக்கின்றாரா என்று கேட்டுவிட்டு, உறுதியாக இந்த விவரம் தெரிந்துக்கொண்ட பிறகு உங்கள் கையொப்பத்தை கொடுங்கள். யாருக்குத் தெரியும்! பசி மயக்கத்தில் முஸ்லிம் மருத்துவர் அல்லது உபவாசம் இருக்கும் கிறிஸ்தவ மருத்துவர் தன் "கடமையை சரியாக செய்யமுடியாமல்" போக வாய்ப்பு உள்ளது. 

தேதி: 08-Apr-2023


2023 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்