2013 ரமளான் நாள் 6

ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்

முந்தைய ஐந்து தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்:

ஆறாவது தொடர் கட்டுரையை இப்போது படிப்போம்.


அன்புள்ள தம்பிக்கு,

ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதும் நீ, ஏன் நேற்று எழுதவில்லை? அலுவலகத்தில் வேலை  அதிகமாக உள்ளதா? அல்லது எனக்கு எழுதக்கூடாது என்று எண்ணிவிட்டாயா?

நீ விரும்பியபடியே,  இந்த கடிதத்தில் முஹம்மது புரிந்த இதர வழிப்பறி கொள்ளைகள் பற்றிய கேள்விகளை உன்னிடம் கேட்கிறேன்.

முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகள்:

முஹம்மது மதினாவிற்குச் சென்றுவிட்ட பிறகு அவர் தம்முடைய சஹாபாக்களை குறைஷிகளின் வியாபாரிகளை கொள்ளையிட அனுப்பினார்.  முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகளைப் பற்றி முந்தைய கடிதத்தில் எழுதினேன். இப்போது இன்னும் நான்கு வழிப்பறி கொள்ளைகள் பற்றி மிக சுருக்கமாக காண்போம். இந்த வழிப்பறி கொள்ளைகள் "முஹம்மது ஒரு உண்மையான நபி அல்ல" என்பதை நிருபிக்கின்றன, மேலும்  இஸ்லாமியர்களை தர்மசங்கட சூழ்நிலையில் தள்ளுகின்றன. 

அடுத்த நான்கு வழிப்பறி கொள்ளைகள் (மூலம்: ரஹீக் மற்றும் இதர சரித்திர புத்தகங்கள்)

நான்காவது வழிப்பறி கொள்ளை – 'அப்வா' (அ) 'வத்தான்'

ஹிஜ்ரி 2ல் ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக "அல்அப்வா" அல்லது "வத்தான்" என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. . . . இந்த போரின் போது "ழம்ரா"  கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். 

[இந்த வழப்பறியில், குறைஷிகளை இவர்கள் சந்திக்கமுடியவில்லை, ஆனால், "ழம்ரா" இனத்தவரை கொள்ளையடித்தார்கள், அதன் பிறகு அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டார்கள், ரஹீக் புத்தகத்தில் இவர்களை கொள்ளையிட்டது பற்றி அதன் ஆசிரியர் எழுதவில்லை]

ஐந்தாவது வழிப்பறி கொள்ளை – 'பூவாத்'

ஹிஜ்ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம்  நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் "ரழ்வா" என்ற மலைக்கருகில் உள்ள "பூவாத்" என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக்

கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

ஆறாவது வழிப்பறி கொள்ளை – 'துல் உஷைரா':

ஹிஜ்ரி 2ல் ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது  டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன் இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போரில் கலந்து கொள்ளும்படி எவரையும் நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து வியாபாரச் சாமான்களுடன் ஷாம் நோக்கி சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினரை வழிமறிப்பதே நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் "துல் உஷைரா" என்ற இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக் கடந்து விட்டது தெரியவந்தது.

அன்பான தம்பி, மேற்கண்ட மூன்று வழிப்பறி கொள்ளைகளிலும் முஹம்மதுவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. மொத்தம் ஆறு வழிப்பறி கொள்ளைகளை முஹம்மது மேற்கொண்டாலும், அவர் குறைஷிகளை பிடிக்கமுடியவில்லை, அவர்கள் வேறு வழியாகவோ அல்லது இவர்களுக்கு முன்பாகவோ கடந்துச் சென்றுவிட்டார்கள். இந்த மேற்கண்ட  ஆறு வழிப்பறி கொள்ளைகள்  முஹம்மதுவின் நபித்துவம் பற்றிய அனேக சந்தேகங்களை எழுப்புகிறது.  அவைகளை கீழ்கண்ட ஏழாவது வழிப்பறி கொள்ளைப் பற்றி நாம் தெரிந்துக்கொண்ட பின்பு பார்க்கலாம். முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசியா? அல்லது கள்ளத் தீர்க்கதரிசியா? என்பது இதன் மூலம் விளங்கும்.

ஏழாவது வழிப்பறி கொள்ளை – "நக்லா'

இந்த ஏழாவது வழிப்பறி கொள்ளை வித்தியாசமானது. முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் போனதே, வெற்றியின் இரகசியம் ஆகிவிட்டது.  முஹம்மதுவிற்கு கீழ்படிவது அல்லாஹ்விற்கு கீழ்படிவதற்கு சமம் இல்லையா? இப்படியிருக்க முஹம்மதுவின் வார்த்தைகளை உதறித்தள்ளியதே, அல்லாஹ்வின் விருப்பத்தின் படி செய்வது போல ஆகிவிட்டது. 

இந்த விவரம் பற்றி விவரமாக ரஹீக் புத்தகத்தின் 203ம் பக்கத்தில் படிக்கவும். நான் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.

அ) முஹம்மது 12 நபர்களை அனுப்பி, குறைஷி வியாபாரிகளை வேவு பார்த்து வரும் படி அனுப்புகிறார். 

ஆ) அவர்களும் சென்று வேவு பார்க்கிறார்கள், இவர்கள் தலைச்சவரம் செய்துச் சென்றதாலும், அந்த மாதம் புனித மாதம் என்பதாலும் குறைஷி வியாபாரிகள் இவர்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. இவர்கள் மூலம் ஆபத்து வராது என்று நினைத்துவிட்டார்கள்.

 

இ) ஆனால், முஹம்மது அனுப்பிய நபர்களோ, இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அதாவது பொருட்களுடன் இருக்கும் குறைஷி வியாபாரிகளை விட்டுவிடக்கூடாது, அவர்களை தாக்கி கொள்ளையிடவேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்துக்கொண்டார்கள்.

ஈ) முஹம்மதுவின் வார்த்தைக்கு விரோதமாக செயல்பட்டு, அவர்கள் குறைஷிகளை கொள்ளையிட்டு, கொலையும் செய்து பொருட்களை மதினா கொண்டுவந்துவிட்டார்கள். முஹம்மதுவிற்கும் ஐந்தில் ஒரு பாகத்தை கொடுத்தார்கள், ஆனால் முஹம்மது இந்த செயலை வெறுத்தார், அவர் கோபத்தில் இருந்தார். முஹம்மது தனக்கு கொடுத்த பொருட்கள் மற்றும் பிடிபட்ட கைதிகள் பற்றி மௌனம் சாதித்தார். 

உ) குறைஷிகள் முஹம்மது பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். புனித மாதத்திலும் இவர் வன்முறையில் ஈடுபடுகிறார், இவர் எப்படி நபியாக இருக்கமுடியும்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.  முஹம்மதுவின் வார்த்தைக்கு எதிராக செயல்பட்டதினால், சஹாபாக்கள் தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு துக்கமாக இருக்கிறார்கள்.

ஊ) இந்த சமயத்தில் அல்லாஹ் குர்ஆன் 2:217 வசனத்தை இறக்கி, "சஹாபாக்களின் செய்கைகளுக்கு ஆதரவாக" பேசினார். இதன் பிறகு முஹம்மது இயல்பு நிலைக்கு திரும்பினார், பொருட்களை பெற்றுக்கொண்டார். சஹாபாக்களும் நிம்மதியடைந்தார்கள்.

இது தான் நக்லா கொள்ளைப் பற்றிய விவரங்கள். மேற்கண்ட அனைத்து விவரங்கள் பற்றி ரஹீக் என்ற புத்தகத்தில் படிக்கலாம் (பக்கங்கள் 201, 202 & 203). 

இப்போது மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும், எப்படி முஹம்மதுவின் நபித்துவத்தை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது? என்பதைக் காண்போம்.

முஹம்மதுவின் வஹி பற்றி இஸ்லாமிய நம்பிக்கை:

1) இஸ்லாமியர்களின் படி முஹம்மது ஒரு தீர்க்கதரிசி ஆவார்.

2) இவருக்கு இரண்டு வகையான வஹிகளை (வெளிப்பாடுகளை) அல்லாஹ் கொடுத்தார்.

3) முதல் வகை வஹி -  ஜிப்ராயீல் தூதன் குர்-ஆனை முஹம்மதுவிற்கு ஓதிக் காண்பிப்பார், அதனை முஹம்மது மக்களுக்கு ஒதிக்காண்பிப்பார், அதுவே குர்-ஆன்.

4) இரண்டாவது வகையான வஹியை யார் கொண்டு வந்தார்கள் என்று தெரியாது, ஆனால் அதனை முஹம்மது பெற்று, அதன் படி தான் மற்றவர்களுக்கு கட்டளைகளை கொடுத்தார், தானும் அந்த வஹியின் படியே வாழ்ந்து காட்டினார். அதாவது, முஹம்மதுவின் பேச்சும், செயல்களும் இரண்டாவது வஹியின் படியே இருந்தது.  சண்டைக்குச் செல்லும் படி, முஹம்மது சஹாபாக்களுக்கு கட்டளை கொடுத்தால், இவருக்கு அல்லாஹ்விடமிருந்து இரண்டாவது வகையான வஹி ஏற்கனவே வந்துள்ளது என்று பொருள்.  இதனை அடிப்படையாகக் கொண்டு முஹம்மது சஹாபாக்களை போருக்கு செல்லும் படி, குறைஷிகளின் வியாபாரிகளை தாக்கி, அவர்களின் பொருட்களை அபகரிக்கும் படி கூறியுள்ளார்.

5) முஹம்மதுவின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் வஹியாகும். ஆகையால் தான் முஸ்லிம்கள் முஹம்மதுவை அப்படியே காபி அடித்து வாழவேண்டும் என்று உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். முஹம்மது தாடி விட்டால், முஸ்லிம்களும் தாடி விடுகிறார்கள். இஸ்லாமின்படி, இப்படி முஹம்மதுவை முழுவதுமாக பின்பற்ற முஸ்லிம்கள் முயற்சிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.

தம்பி, மேற்கண்டவைகள் இஸ்லாமிய நம்பிக்கைகளாகும், இதனை நீ மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன். இவைகளை மனதில் வைத்துக்கொண்டு, நாம் இப்போது "நக்லா" என்ற வழிப்பறி கொள்ளை நிகழ்ச்சியை சுற்றியுள்ள விஷயங்களை ஆய்வு செய்வோம்.   தம்பி, இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவைகள், இவைகளை கூர்ந்து கவனி.

முதல் ஆறு வழிப்பறி கொள்ளைகள் தோல்வியை தழுவியது ஏன்?

அ) முதன் முதலாக குறைஷி வியாபாரிகளை கொள்ளையிட முஹம்மது ஆறுமுறை சஹாபாக்களை அனுப்பினார். ஆனால், ஒரு முறையும் அவரால் குறைஷி வியாபாரிகளை கொள்ளையிட முடியவில்லை. இவர்களின் கைக்கு பிடிபடாமல் குறைஷிகள் வேறு வழியாக சென்றுவிட்டார்கள், சில நேரங்களில் முஸ்லிம்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே, அதை தாண்டி சென்றுவிட்டார்கள். முஸ்லிம்கள் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள்.

ஆ) முஹம்மது ஒரு நபியானால், தனக்கு வந்த வஹியின்படிதான் அவர் அனைத்தையும் செய்தார் என்றுச் சொல்வது உண்மையானால், ஏன் இத்தனை முறை, முஹம்மதுவிற்கு வந்த வஹி தோல்வி அடைந்தது?

இ) இந்த ஆறுமுறை கொள்ளையிட முஹம்மது அனுப்பியது தன்னுடைய சொந்த சிந்தனை என்று இதன் மூலம் தெரிகின்றதல்லவா? இப்படி சண்டையிட முஹம்மது அனுப்பியது தன் சொந்த சிந்தனையிலிருந்து வந்த செயல் என்று கருதினால்,  இன்னும் எவைகளையெல்லாம் அவர் சொந்தமாக கூறியிருப்பார் எந்த சந்தேகம் எழுகின்றது.  ஹதீஸ்களில் வரும் விவரங்களில் எத்தனை சதவிகிதம் வஹி? எத்தனை சதவிகிதம் சொந்தமாக இட்டுக்கட்டியது?

ஈ) "இல்லை.. இல்லவே இல்லை. முஹம்மது தனக்கு வந்த இரண்டாவது வகையான வஹியின் படி தான் அல்லாஹ்வின் காரியங்களைச் செய்வார்" என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், ஏன் அந்த ஆறுமுறையும் தோல்வியை தழுவினார்கள்? இதனால் அல்லாஹ்வின் வஹியில் தவறு இருக்கிறது என்று நாம் எண்ணவேண்டி வருமே!

உ) அல்லாஹ் என்பவர் சர்வ ஞானி என்றால், குறைஷிகள் எந்த வழியில் செல்கிறார்கள்? எந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைவார்கள் என்று அல்லாஹ் அறியாமல் போனதென்ன? அவர் ஏன் தன் நபிக்கு தவறான விஷயங்களை வஹியாக சொன்னார்?  ஒரு முறை இரு முறை அல்ல, ஆறுமுறையும் இப்படியே நடந்தது.

இப்பொழுது நக்லா வழிப்பறி கொள்ளைப் பற்றி பார்ப்போம்.

அல்லாஹ்வின் வஹியை பெற்றவர்கள் யார்? முஹம்மதுவா? (அ) சஹாபாக்களா? 

நம்முடைய கேள்விகள் என்னவென்றால்:

1) முஹம்மதுவிற்கு வஹி வந்து அதன்படி தான் அவர் சஹாபாக்களை நக்லாவிற்கு சண்டையிடக்கூடாது என்று சொல்லி அனுப்பினாரா? அல்லது சுமயாக சிந்தித்து, அல்லாஹ் கட்டளையிடாமலேயே அனுப்பினாரா?

2) வஹி வந்ததால் தான் முஹம்மது அனுப்பினார் என்றுச் சொன்னால்? சஹாபாக்கள் செய்தது முஹம்மதுவிற்கு / அல்லாஹ்விற்கு எதிரான செயல் அல்லவா?

3) சஹாபாக்களின் செய்கைகளை ஆதரித்து  அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார், அப்படியானால் ஏன் அவர் முதலில் சண்டையிடக்கூடாது என்று முஹம்மதுவிற்கு சொல்லவேண்டும்? அதன் பிறகு, சண்டையிட்டு கொள்ளையிட்டதை ஆதரிக்கவேண்டும்? அல்லாஹ் முஹம்மதுவோடு விளையாடுகிறாரா?

4) நக்லா நிகழ்ச்சிப் பற்றி, முஹம்மதுவிற்கு எட்டாத ஞானம் கூட சஹாபாக்களுக்கு எட்டியது என்று நாம் சொல்லலாம் அல்லவா? அதாவது அல்லாஹ் சிந்தித்தது போலவே, சஹாபாக்கள் சிந்தித்து செயல்பட்டார்கள். ஆனால், அல்லாஹ் சிந்தித்தது போல முஹம்மது சிந்திக்கவில்லை.

5) முஹம்மது நபியா அல்லது சஹாபாக்கள் நபிகளா?

6) நிலைமை இன்னும் மோசமாக மாறுகிறது, அதாவது ஆறுமுறை முஹம்மது குறைஷி வியாபாரிகளை கொள்ளையடிக்க அனுப்பினார், முஹம்மதுவின் வார்த்தைகளின்படியே அவர்கள் செய்தார்கள், அதனால் தோல்வி தான் மிஞ்சியது. ஏழாவது முறையும் அனுப்பினார், இந்த முறை முஹம்மதுவின் பேச்சை கேட்காமல், சொந்தமாக முடிவு எடுத்தார்கள், இதனால் வெற்றியும் பெற்றார்கள், பொருட்களையும் கொள்ளையடித்தார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, அல்லாஹ்வின் அனுமதியும் கிடைத்துவிட்டது, தண்டனையிலிருந்தும் தப்பித்தார்கள். முஹம்மதுவின் வார்த்தைகளை கேட்காததினால் கிடைத்த நன்மைகளைப் பாருங்கள்.

7) கடைசியாக, முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் வெற்றிப்பெற வைத்தவர்கள் சஹாபாக்கள் என்றுச் சொன்னால் மிகையாகாது.

தம்பி, நபி செய்யும் அனைத்து செயல்களுக்கும் "இறைவனின் வஹியை" வம்புக்கு இழுப்பதினால் வந்த பிரச்சனையை பார்த்தாயா?

முஹம்மது பேசினால் வஹி, 

பேசாமல் இருந்தாலும் வஹி,

நடந்தால் வஹி, 

சிரித்தால் வஹி, 

விரலை ஆட்டினால் வஹி, 

விரலை ஆட்டாமல் இருந்தால் வஹி,

தாடி வைத்தால் வஹி, 

தாடியை கத்தரித்தால் வஹி, 

மக்கள் கேள்வி கேட்டு முஹம்மது பதில் சொன்னால் வஹி, 

பதில் சொல்லாமல் இருந்தாலும் வஹி, 

மக்கள் கேள்வி கேட்காமலேயே அவராக பதில் சொன்னலும் வஹி 

அவர் உண்மையைச் சொன்னாலும் வஹி,

பொய்யைச் சொன்னாலும் வஹி,

அவர் கட்டுக்கதைகளைச் சொன்னாலும் வஹி,

இட்டுக்கட்டிச் சொன்னாலும் வஹி

இப்படி ஒரு மனிதனை விக்கிரமாக பூஜிக்கிறீர்கள் நீங்கள். இதனால் விளையும் பிரச்சனைகளை பார்த்தாயா தம்பி?

இரண்டாவது வகை வஹி முஹம்மதுவிற்கு வருவது போல,  சஹாபாக்களுக்கும் அதே வஹி வந்து அவர்கள் (அல்லாஹ்வின் விருப்பத்தின் படி) செயல்பட்டதாக மேற்கண்ட நிகழ்ச்சியில் காண்கிறோம்.

முஹம்மது கொள்ளையடிக்க அனுப்பியது தன் சுய விருப்பத்தின் படியா? அல்லது வஹியின் அடிப்படையிலா? தம்பி உன்னால் பதில் சொல்லமுடியுமா? [தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்களிடம் இதற்கு பதில் இருந்தாலும் அனுப்புங்கள்]

உன்னுடைய பதிலுக்காக எதிர்ப்பார்க்கிறேன்.

இப்படிக்கு 

உன் அண்ணன்

உமர்

மூலம்

உமரின் ரமளான் மாத கட்டுரைகள்