பர்னபா சுவிசேஷம் - ஓர் அறிமுகம்

(14ம் நூற்றாண்டு முஸ்லிமின் ஒரு மிகப்பெரிய மோசடி ஆவணம்)

இயேசுவின் வரலாற்றை எழுதிய மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் நேரடிச் சீடர்கள் அல்லர். அவர்கள் கேள்விப்பட்டதைத்தான் எழுதினார்கள்.

இயேசுவின் நேரடிச் சீடராக பர்னபா என்பவர் திகழ்ந்தார். அவர் இயேசு பிடிபடும்போது உடன் இருந்தவர். அவர் எழுதிய சுவிசேஷம் இஸ்லாம் கூறுவது போலவே இந்த நிகழ்வைச் சொல்கிறது. இதன் காரணமாக கிறித்தவ மதகுருமார்கள் பர்னபா சுவிசேஷத்தை நீக்கி விட்டனர். பி ஜைனுல் ஆபிதீன், குர்-ஆன் தமிழாக்கம் விளக்க எண்: 456

முன்னுரை

இயேசுக் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களில் காணலாம். அப்போஸ்தலர்களும் அவர்களது சீடர்களும் எழுதிய இயேசுவின் வாழ்க்கை சரிதைகள் நான்கும் கி.பி. முதலாம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டுவிட்டது, அவைகள் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்ற புத்தகங்களாகும். 

கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அனேகர் இயேசுவின் சரிதையை எழுத ஆரம்பித்தனர், தங்கள் சொந்த கருத்துக்களையும், கட்டுக்கதைகளையும் சேர்த்து எழுதினர். இப்படி எழுதப்பட்ட புத்தகங்களை தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கிறோம். அவைகள் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதியாக கருதப்படவில்லை. 

ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது என்பவரால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாமாகும். இம்மதத்தை பின் பற்றுபவர்களை முஸ்லிம்கள் என்பார்கள். இவர்களின் வேதம் ”குர்-ஆன்” ஆகும். குர்-ஆனில் பைபிளின் அனேக நிகழ்ச்சிகள் திருத்திச் சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக, இயேசுவிற்கு தெய்வீகத்தன்மையில்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அவர் உயிர்த்தெழவில்லை என்று குர்-ஆன் பைபிளுக்கு எதிராகச் சொல்கிறது. மேலும், இயேசு வெறும் ஒரு சாதாரண தீர்க்கதரிசி மட்டுமே என்றும் குர்-ஆன் சொல்கிறது.  ஆனால், பைபிளில் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் வாழ்க்கை வரலாறு தான் உண்மையானது. இயேசுவிற்கு 700 ஆண்டுகளுக்கு பின்பு வந்த குர்-ஆன் சொல்லும் விவரங்கள் அனைத்தும் தவறானவை என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். இதனை ஜீரணித்துக் கொள்ளமுடியாத முஸ்லிம்கள் பல யுக்திகளை கையாண்டார்கள், அதில் ஒன்று தான் ’பைபிள் திருத்தப்பட்டது’ என்ற குற்றச்சாட்டு. குர்-ஆனில் உள்ள விவரங்களில் எங்கேயெல்லாம் பைபிள் முரண்படுமோ, அங்கேயெல்லாம் பைபிள் திருப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் முஸ்லிம்கள். 

முஸ்லிம்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக ஒரு புத்தகம் இவர்கள் கையில் கிடைத்துள்ளது. அதன் பெயர் ‘பர்னபா சுவிசேஷம்’ என்பதாகும். இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவத்திற்கும், பைபிளுக்கும் எதிராக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.  முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ’தமிழ் நாடு தௌஹித் ஜமாத்’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் குர்-ஆன் தமிழாக்கத்தில் இந்த ‘பர்னபா சுவிசேஷத்தை’ குறிப்பிட்டு எழுதி, பைபிளை குற்றப்படுத்தியுள்ளார். புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்கள், இயேசுவின் சீடர்களால் எழுதப்படவில்லை என்றும், இந்த பர்னபா சுவிசேஷம் மட்டும் தான் இயேசுவின் நேரடி சீடரால் எழுதப்பட்டது என்றும் எழுதியுள்ளார். 

இந்த புத்தகம் கீழ்கண்ட மூன்று நோக்கங்களுக்காக எழுதப்படுகின்றது.

1. பர்னபா சுவிசேஷம் என்ற புத்தகத்தை யார் எழுதினார்கள்? எப்போது எழுதினார்கள்? இது முதலாம் நூற்றாண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு அதிகாரபூர்வமான புத்தகமா? என்பதை ஆய்வு செய்து, இதன் உண்மை நிலையை தமிழ் பேசும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு அறிவிப்பது இப்புத்தகத்தின் முதல் நோக்கமாகும்.

2. மோசடி புத்தகமாகிய ’பர்னபா சுவிசேஷத்தின்’ உண்மை நிலையை அறிந்துக்கொள்ளாமல், அல்லது உண்மையை அறிந்திருந்தாலும், பைபிளை குற்றப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இணையத்திலும், புத்தகங்களிலும் எழுதிக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆதார பூர்வமான பதில்களைத் தருவது இப்புத்தகத்தின் இரண்டாவது நோக்கமாகும்.

3. கடைசியாக, மேற்கண்ட இஸ்லாமியர்களின் மோசடி புத்தகங்களை படித்துவிட்டு, அவர்களின் பேச்சுக்களை கேட்டுவிட்டு, குழப்பமடையும்  கிறிஸ்தவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதலை பைபிளின் படி தருவதாகும். இதன் மூலம், கிறிஸ்தவர்கள் இஸ்லாமின் உபதேசத்தை இணம் கண்டுக்கொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும்.

மேற்கண்ட மூன்று நோக்கங்களை இந்த புத்தகம் பூர்த்தி செய்ய கர்த்தர் கிருபை அளிப்பாராக. 

அடுத்த தொடரில் சந்திப்போம்.


பின் குறிப்பு:

ஜீசஸ் இன்வைட்ஸ் தளத்தில் ‘ஆய்வாளன்’ என்ற பெயரில் வந்த கட்டுரையை கீழே அப்படியே கொடுத்துள்ளேன். ஏனென்றால், என்னுடைய ’இந்த பர்னபாஸ் சுவிசேஷம் தொடர்கள் ஆதாரங்களோடு’ வெளிவரும் போது, ஜீசஸ் இன்வைட்ஸ் தள நிர்வாகிகள், வேறு வழியில்லாமல் நிச்சயம், கீழ்கண்ட கட்டுரையை நீக்குவார்கள். வாசகர்களுக்கு உண்மை விளங்கவேண்டும் என்பதற்காக, அக்கட்டுரையை முழுவதுமாக பதிக்கிறேன்.

பைபிளின் நான்கு சுவிஷேசங்கள் போல் இன்னும் பலரும் எழுதினார்கள். பவுல் உண்டாக்கிய கோட்பாட்டுக்கு அவை சம்மட்டி அடியாக இருந்ததால் அவற்றை வேத புத்தகத்தில் இருந்து கிறித்தவர்கள் நீக்கி விட்டனர். அவற்றுள் முக்கியமானது பர்னபா என்பவர் எழுதிய சுவிஷேசமும் ஒன்றாகும்.

பர்னபா சுவிஷேசம் மற்ற அனைத்து சுவிஷேசங்களில் இருந்தும் சிறப்புற்றதாகும். ஏனெனில் மற்ற சுவிஷேசக்காரர்கள் இயேசுவின் நேரடிச் சீடர்களாக இருக்கவில்லை. இது குறித்து முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பர்னபா இயேசுவின் நேரடிச் சீடராக இருந்தார். இயெசுவைச் சிலுவையில் அறையத் தேடிய போது என்ன நடந்தது என்பதை இவர் நேரடியாகப் பார்த்தவர்.

நான்கு சுவிஷேசம் எழுதியவர்களும் அப்போது நடந்ததை தாங்கள் நேரடியாகப் பார்த்ததாகக் கூறவில்லை. கேள்விப்பட்டதையும் யூகித்ததையும் தான் எழுதினார்கள். ஆனால் பர்னபா, நான் சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவன் என்று கூறுகிறார்.

கீழே நாம் எடுத்துக் காட்டிய மேற்கோளில் இருந்தும் இவர் இயேசுவின் சீடர் என்பதை அறியலாம்.

நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது என்று பர்னபா கூறுகிறார். தன்னையும் மற்ற சீடர்களையும் உள்ளடக்கி நாங்கள் அனைவரும் நினைத்தோம் என்று கூறுகிறார். இவர் இயேசுவின் நேரடியான சீடர் என்பதற்கு இதுவே சான்று.

இவரது சுவிஷேசத்தை வேதப் புத்தகத்தில் இருந்து தூக்கி வீசியது போல் இவரையும் பன்னிரண்டு சீடர்களில் இருந்து தூக்கி விட்டனர். இவரை இயேசுவின் சீடரான மாற்குவின் சீடர் என்று ஒரு படி இறக்கி விட்டனர்.

பர்னபா என்பவர் பவுல் காலத்தில் அவருடன் இணைந்து போதனை செய்தவர். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர். இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவர் எழுதிய சுவிஷேசம் கூறுவதால் இவரது சுவிஷேசத்தை வேதப்புத்தகத்தில் இருந்து நீக்கி விட்டனர்.

பர்னபா பற்றி பைபிளில் காணப்படும் குறிப்புகள் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக் கொண்டு போய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.

அப்போஸ்தலர் நடபடிகள் 9:27

எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக் குறித்துக் கேள்விப்பட்ட போது, அந்தியோகியா வரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்ட போது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான். அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப் போய், அவனைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினாட்;கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

(அப்போஸ்தலர் நடபடிகள் 11:21-26)

அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனே கூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிற போது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:1,2

அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனே கூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவ வசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:7

ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்து போன பின்பு, யூதரிலும் யூத மார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலை கொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்தி சொன்னார்கள்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:43

அடுத்த ஓய்வு நாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவ வசனத்தைக் கேட்கும்படி கூடி வந்தார்கள். யூதர்கள் ஜனக் கூட்டங்களைக் கண்ட போது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிற படியினால், இதோ, நாங்கள் புறஜாதியரிடத்தில் போகிறோம்.  நீர் பூமியின் கடைசி பரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேத வாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:44-47

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங் கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சில நாளைக்குப் பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப் பார்ப்போம் வாரும் என்றான். அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர் கொண்ட யோவானைக் கூட அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றான்.

(அப்போஸ்தலர் நடபடிகள் 15:37)

பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்றான். இதைப் பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறிச் சீப்புரு தீவுக்குப் போனான். பவுலோ சீலாவைத் தெரிந்து கொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.

அப்போஸ்தலர் நடபடிகள் 15:38-41

பதினாலு வருஷம் சென்ற பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக் கொண்டு பர்னபாவுடனே கூட மறுபடியும்  எருசலேமுக்குப் போனேன்.

கலாத்தியர் 2:1

எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்த போது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, தரித்திரரை நினைத்துக் கொள்ளும்படிக்கு மாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.

கலாத்தியர் 2:9,10

பவுலுக்கு நிகராகவும் அவரை விட மேலாகவும் இருந்த பர்னபா எழுதிய சுவிஷேசத்தில் சிலுவை மரணம் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.

பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)

பர்னபாஸின் சுவிஷேசம் 222 அதிகாரங்களைக் கொண்டது. இதில் இயேசுவை சிலுவையில் அறைவதற்காக எதிரிகள் திட்டமிட்ட போது என்ன நடந்தது என்பதை 215 முதல் பர்னபா விரிவாக விளக்குகிறார். அதில் 215, 216 217 ஆகிய அதிகாரங்களை மட்டும் கீழே தருகிறோம்.

பர்னபாவின் சுவிஷேசத்தை ஆங்கிலத்தில் முழுமையாக ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ள்ஹஸ்ரீழ்ங்க்-ற்ங்ஷ்ற்ள்.ஸ்ரீர்ம்/ண்ள்ப்/ஞ்க்ஷஹழ்/ண்ய்க்ங்ஷ்.ட்ற்ம்.. என்ற முகவரியில் காணலாம்.

215.

When the soldiers with Judas drew near to the place where Jesus was, Jesus heard the approach of many people, wherefore in fear he withdrew into the house. And the eleven were sleeping.

Then God, seeing the danger of his servant, commanded Gabriel, Michael, Rafael, and Uriel, his ministers, to take Jesus out of the world.

The holy angels came and took Jesus out by the window that looketh toward the South. They bare him and placed him in the third heaven in the company of angels blessing God for evermore..

இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்த போது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டார். வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பயத்தின் காரணமாக அவர் வீட்டிற்குள் பின்வாங்கிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர்.

அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவைப் பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்குக் கட்டளையிட்டார்.

தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக  இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக் கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

216. Judas entered impetuously before all into the chamber whence Jesus had been taken up. And the disciples were sleeping. Whereupon the wonderful God acted wonderfully, insomuch that Judas was so changed in speech and in face to be like Jesus that we believed him to be Jesus. And he, having awakened us, was seeking where the Master was. Whereupon we marvelled, and answered: ‘Thou, Lord, art our master; hast thou now forgotten us?’

And he, smiling, said: ‘Now are ye foolish, that know not me to be Judas Iscariot!’

And as he was saying this the soldiery entered, and laid their hands upon Judas, because he was in every way like to Jesus.

We having heard Judas’ saying, and seeing the multitude of soldiers, fled as beside ourselves.

And John, who was wrapped in a linen cloth, awoke and fled, and when a soldier seized him by the linen cloth he left the linen cloth and fled naked. For God heard the prayer of Jesus, and saved the eleven from evil..

இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்குப் பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”

இப்படிக் கூறிக் கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த  யோவான் எழுந்து ஓடிய போது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்த போது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் தீமையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

217. The soldiers took Judas and bound him, not without derision. For he truthfully denied that he was Jesus; and the soldiers, mocking him, said: ‘Sir, fear not, for we are come to make thee king of Israel, and we have bound thee because we know that thou dost refuse the kingdom.’

Judas answered: ‘Now have ye lost your senses! Ye are come to take Jesus of Nazareth, with arms and lanterns as [against] a robber; and ye have bound me that have guided you, to make me king!’

படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்பட வேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”

இப்போது நீங்கள் உங்கள் மதியை இழந்து விட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனைப் (பிடிப்பது) போல் நாஸரேத்துடைய இயேசுவைப் பிடிப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் விளக்குகளுடன் வந்துள்ளீர்கள். உங்களுக்கு வழிகாட்டிய என்னையே அரசனாக்குவதற்காக நீங்கள் பிடித்து வைத்துள்ளீர்கள்” என்று யூதாஸ் பதிலளித்தான்.

இது குறித்து கிறித்தவ குருமார்கள் பதில் அளிக்கும் போது பர்னபா சுவிஷேசம் என்பது முஸ்லிம்களின் கற்பனை என்ற ரெடிமேட் பதிலைக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதர்கு அவர்கள் எவ்வித ஆதாரத்தையும் காட்டுவதில்லை.

பர்னபாவின் சுவிஷேசத்தை கிறித்தவ குருமார்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆதாரங்கள் மூலமே சிலுவைப் பலி சித்தாந்தம் தவிடு பொடியாகியுள்ளதை மறுக்க முடியாது.

ஆய்வாளன்


பர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்