கேள்வி: இஸ்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதென்று முஸ்லிம்கள் ஏன் நம்புகிறார்கள்?

பதில்: ஒவ்வொரு மதமும் ஒரு நம்பிக்கையின் மீது சார்ந்துள்ளது. ஒரு மதம் என்று எடுத்துக்கொண்டால், அதற்கென்று ஒரு வேத புத்தகம் இருக்கும், அதற்கென்று ஒருவர் தோற்றுவித்தவர் இருப்பார், மேலும் ஒரு இறைவன் இருப்பான்/ர்.

முஸ்லிம்களின் வேதம் குர்‍ஆன், தோற்றுவித்தவர் முஹம்மது மற்றும் இறைவன் அல்லாஹ். இந்த மூன்றை விமர்சிக்கக்கூடாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இது தவறு.

இதே போன்று தான் கிறிஸ்தவர்களுக்கும், பைபிளும், யெகோவா தேவனும், இயேசுவும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை விமர்சிப்பவர்களை கிறிஸ்தவர்கள் கொலை செய்வதில்லை.

பைபிளின் தொடர்ச்சி தான் குர்‍ஆன் என்றும், இயேசுவிற்கு அடுத்தபடியாக அவரது அடிச்சுவடிகளில் வந்தவர் முஹம்மது என்று முஸ்லிம்கள் சொன்னாலும், இது உண்மையில்லை.  கிறிஸ்தவம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்று கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை, அப்படி விமர்சிக்கப்படும் போது, அமைதியான முறையில் பதில் சொல்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம்கள் இப்படி இல்லை ஏனென்றால், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை கவனிக்கும்போது, அவர் ஒரு சர்வாதிகாரி போன்று நடந்துக்கொண்டார். தம்மை விமர்சித்தவர்களை கொன்று குவித்தார். இஸ்லாமை ஏற்காதவர்கள் மீது போர் தொடுத்தார், சண்டையிட்டார். இதையே அவருக்கு அடுத்தபடியாக வந்த முஸ்லிம் தலைவர்களாகிய கலிஃபாக்களும் செய்தார்கள்.

தங்கள் முஹம்மது என்ன செய்தாரோ அதையே இன்றைய முஸ்லிம்கள் செய்கிறார்கள். இஸ்லாமை விமர்சிப்பவர்களை கொலை செய்கிறார்கள். இந்த காரியத்தை சிலர் செய்தாலும், பெரும்பான்மை முஸ்லிம்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதனை ஆதரிக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ஏன் "இஸ்லாம் விமர்சனத்திற்கும், ஆய்விற்கும் அப்பாற்பட்டதென்று" நம்புகிறார்கள் என்ற கேள்விக்கான பதில் "இஸ்லாமிய நபி முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும்". 

நான் சொல்வதை நம்பாதவர்கள், கீழ்கண்ட புத்தகங்களை மிகவும் சீரியஸாக படியுங்கள்:

1) குர்‍ஆன் தமிழாக்கத்தை படியுங்கள் (ஆங்கிலத்திலும் படியுங்கள்)

2) குர்‍ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பின்னணியை, விளக்கத்தை இஸ்லாமிய தஃப்ஸீர்களிலிருந்து (விளக்கவுரைகளிலிருந்து) படியுங்கள்.

3) ஹதீஸ் தொகுப்புக்களை முக்கியமாக புகாரி மற்றும் முஸ்லில் ஹதீஸ்களை முழுவதுமாக படித்து புரிந்துக்கொள்ளுங்கள்.

4) முஹம்மதுவின் ஸீராவை (வாழ்க்கை வரலாறு) படியுங்கள், முக்கியமாக இப்னு இஷாக்கின் ஸீரத் ரஸூலுல்லாஹ், தபரியின் சரித்திரம், இப்னு இஷாமின் சரித்திரத்தை படியுங்கள்.

5) இஸ்லாமை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகங்களையும் படியுங்கள், அப்போது தான் சில உண்மைகள் வெளியே தெரியும்.

அன்று தம்மை விமர்சித்தவர்களை முஹம்மதுவை கொன்று குவித்தார், இது தான் இறைத்தூதர் காட்டிய வழியென்று நம்பி முஸ்லிம்கள் அதனை இன்று பின்பற்றுகிறார்கள்.


இதர கேள்வி பதில்களை படிக்கவும்

உமரின் கட்டுரைகள் பக்கம்