மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)

(குர்‍ஆனின் சரித்திர தவறு)

Moses and the Samaritan

காளைக் கன்றுப் பற்றிய நிகழ்ச்சியை குர்‍ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்:

"நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்.

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து . . .

". . . நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே
ஸாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் "இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்" என்று சொன்னார்கள்.

...
"ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார். (குர்‍ஆன் 20:85-88, 20:95)

He [Allah] said, "We have tempted thy people since thou didst leave them. 'The Samaritan has led them into error." Then Moses returned ... ... and we cast them [(gold) ornaments], "as the Samaritan" also threw them, into the fire." (Then he brought out for them a Calf, a mere body that lowed; and they said, "This is your god, and the god of Moses, whom he has forgotten.") ... Moses said, "And thou, 'Samaritan," what was thy business?" ... -- Sura 20:85-88, 95

சமாரியா பட்டணம் உம்ரி இராஜாவினால் கி.மு. 870ல் ஸ்தாபிக்கப்பட்டது (பார்க்க 1 இராஜாக்கள் 16:24), ஆனால்,அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 1400 காலக் கட்டத்தில் வாழ்ந்த மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் மக்களை எப்படி ஒரு சமாரியன் வழிகெடுத்து இருப்பான்? "சமாரியர்கள்" என்ற தனிப்பட்ட பிரிவு வட இஸ்ரவேல் மக்கள் நாடு கடத்தப்பட்ட பிறகு தான் அடையாளம் காணப்பட்டார்கள். அந்த நிலப்பரப்பில் கி.மு. 722ல் சர்கான் II என்ற அரசன் காலத்தில் இவர்கள் இஸ்ரவேலரல்லாதவர்களோடு ஒன்றர கலந்து வாழலானாரகள். இவர்கள் யூத மற்றும் இதர பல மத கோட்பாடுகளை பின்பற்றலானார்கள். ஆக, ஒரு சமாரியன் இஸ்ரவேல் மக்களை மோசேயின் காலத்தில் விக்கிர ஆராதனை என்ற வழிகேட்டுக்கு வழி நடத்தினான் என்பது சரித்திரத்தின் படி நடக்கமுடியாத ஒரு விஷயமாகும். மோசே மற்றும் சமாரியர்களின் கால கட்டம் குறைந்த பட்சம் 500 லிருந்து 700 ஆண்டுகள் கால வித்தியாசம் கொண்டது.

இந்த "சமாரியன்" என்ற வார்த்தையை யூசுப் அலி அவர்கள் தன் குர்ஆன் மொழியாக்கத்தில் "ஸாமிரி - Samiri" என்று மொழியாக்கம் செய்தார்,

பிக்தால் (Pickthall) தன் மொழியாக்கத்தில் "அஸ் ஸாமிரீ - As Samirii" என்றும் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆர்பெர்ரி (Arberry) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் போதும், கஸிமிர்ஸ்கி (Kasimirski) என்பவர் பிரென்சு மொழியில் மொழியாக்கம் செய்யும் போதும் இவ்வார்த்தையை "ஸமாரியன் - Samaritan" என்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

யூசுப் அலி தன் பின் குறிப்பில், இவ்வார்த்தைக்கு பொருள் கூறுகிறார், அதாவது இந்த பெயர் "ஷெமர் - Shemer" என்பதாகும் இதற்கு "அறிமுகமில்லாதவர்" என்று பொருள், அல்லது "ஷோமெர் - Shomer" என்பதாகும் இதற்கு "காவல் காப்பவர்" என்று பொருள் என்கிறார். இதற்கு நிகரான அரபி வார்த்தை "ஸமரா - Samara" என்பதால் அவர் இப்படி வார்த்தைகளுக்கு பொருள் கூறியுள்ளார். இந்த வார்த்தைக்கு இதர பொருள்களை கொடுக்க யூசுப் அலி அவர்களின் முயற்சிக்கு அரபி மொழி ஒத்துழைக்கவில்லை. ஆர்பெர்ரியும், கஸிமிர்ஸ்கி அவர்களும் மொழியாக்கம் செய்தது போல, அரபி வார்த்தைகளுக்கு நிகரான மொழியாக்கத்தை யூசுப் அலி அவர்கள் செய்திருக்க வேண்டும்.

தாமஸ் பாட்ரிக் ஹக்ஸ் தன் "டிக்ஷ்னரி ஆப் இஸ்லாம் - Dictionary of Islam" , பக்கம் 564ல் "அல் பைதாவி [அஸ் ஸாமிரி குறித்து] கூறும் போது, அவருடைய பெயர் மூஸா இபின் ஜாபர், இவர் சமாரிய குலத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்".

இந்த குழப்பம் முஹம்மதுவிற்கு எப்படி வந்தது? பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு இடத்தில் கன்றுக்குட்டி விக்கிரகம் பற்றிய விவரங்கள் வருகின்றன.

சலொமோன் ஆட்சி காலத்திற்கு பின்பு, இஸ்ரவேல் மக்களின் நாடு இரண்டு பாகங்களாக பிரிந்துப்போனது, அதாவது தென் பகுதி யூதா என்றும் வட பகுதி இஸ்ரேல் என்றும் பிரிந்தது. ஆனால், தேவனை ஆராதனை செய்யக்கூடிய இடம் மட்டும் இன்னும் எருசலேமில் மட்டுமே இருந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஒரு ஆதாரமாக இருக்கவேண்டுமென்பதற்காக, முதலாம் யெரோபெயாம், இரண்டு இடங்களை தெரிந்துக்கொண்டு அவைகளில் பொன் கன்றுக்குட்டி விக்கிரகங்களை செய்வித்து வைத்தான்(1 இராஜாக்கள் 12:26-33). ஆனால், இப்படிப்பட்ட அருவருப்பு கூடாது என்று தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். (1 இராஜாக்கள் 12:30, 2 இராஜாக்கள் 10:29; 17:16; 2 நாளாகமம் 13:8). அதன் பிறகு சமாரியா பட்டணம் இந்த வட இஸ்ரேல் பாகத்திற்கு தலை நகரமாக மாறியது.

பொன் கன்றுக்குட்டி வணக்கம் பற்றி இரண்டு நிகழ்ச்சிகளை பைபிள் சொல்கிறது. முதலாவது மோசேயின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி, இரண்டாவது சமாரியாவை தலை நகரமாக கொண்ட வட இஸ்ரேலில் நடந்த நிகழ்ச்சியாகும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளை சரியாக புரிந்துக்கொள்ளாமல் தான் முஹம்மது குழம்பியிருக்கவேண்டும். ஓசியா தீர்க்கதரிசன புத்தகத்தில் இதைப் பற்றிய வசனம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்? அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும். (ஓசியா 8:5-6)

.குர்‍ஆன் 20:97ல் அந்த கன்றுக்குட்டியைப் பற்றி தொடர்ந்துச் சொல்கிறது..

"நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) "தீண்டாதீர்கள்" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.

(Moses) said [to the Samaritan]: "Get thee gone! But thy (punishment) will be that thou wilt say, 'Touch me not'; ... Now look at thy god, of whom you hast become a devoted worshipper: We will certainly burn it in blazing fire and scatter it broadcast in the sea!"

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே இருக்கும் தொடர்பைப் பாருங்கள். ஓசியா தீர்க்கதரிசி கூறிய அந்த "சமாரியாவின் கன்றுக்குட்டியைப் பற்றி தான்", குர்ஆன் சொல்லுகின்ற "ஆராதனை செய்துக்கொண்டு இருந்த கன்றுக்குட்டி". இந்த இரண்டு விவரங்களிலும் இறைவன் அதை (கன்றுக்குட்டி விக்கிரகத்தை) அழித்துவிடுவதாக கூறுகிறார். பைபிளில் கூறப்பட்ட சமாரிய வசனத்திற்கும், குர்ஆனில் சொல்லப்பட்ட ஸாமிரி/ஸமாரியன் நிகழ்ச்சிக்கும் இடையே இன்னொரு ஒற்றுமையும் உண்டு. சமாரியர்களுக்கு உண்டாகும் தண்டனை என்னவென்றால், அது "தீண்டத்தகாதவர்கள்" என்பதாகும். தீண்டத்தகாதவர்கள் என்றால் சுத்தமில்லாதவர்கள், அதாவது விக்கிர ஆராதனை செய்ததால் இப்படி கூறப்பட்டார்கள். இது எஸ்றா கால முதல் இன்றுவரையும் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்களாக கண்டதும் இந்த விக்கிரத்தை ஆராதத்தினால் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையானது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல், மோசேக்கு பிறகு 700 ஆண்டுகள் வரை சமாரியர்கள் என்பவர்கள் இல்லை. முஹம்மது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரயாணம் செய்துள்ளார், அங்கு அவர் சமாரியர்கள் பற்றி அறிந்திருப்பார், மட்டுமல்ல, விக்கிர ஆராதனை செய்ததால் தான் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கருதுகிறார்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கக்கூடும். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருக்கும் இந்த விவரத்தைச் சொல்ல வந்த முஹம்மது அறியாமையால் மோசே காலத்து "பொன் கன்றுக்குட்டியோடு" சம்மந்தப்படுத்தி தவறாக‌ பேசிவிட்டார்.

சிந்திக்கத் தூண்டும் ஒரு கேள்வி என்னவென்றால், "அஸ் ஸாமிரி" என்ற வார்த்தைக்கு பொருள் "ஸமாரியன்" அல்ல என்று இஸ்லாமியர்கள் சொன்னால், "ஸமாரியன்" என்ற வார்த்தையை அரபியில் எப்படி கூறுவீர்கள்? இன்றளவும் ஒரு சிறு பிரிவினராக ஸமாரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள். இவர்களை அரபியர்கள் அரபியில் எப்படி அழைப்பாரகள்? 

ஆங்கில மூலம்: Moses and the Samaritan

இதர குர்‍ஆன் முரண்பாடுகள்